| 256 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14 |
செங்கல்பட்டு மாவட்டம் சைதாப்பேட்டை தாலுகா, திருவெற்றியூர் கோயிலிலுள்ள சாசனம் ஒன்று, தெள்ளாறெறிந்த நந்தி போத்தரையரின் 18-ஆம் ஆண்டு, 298-ஆம் நாள் எழுதப்பட்டது.22 இச்சாசனம், நந்திவர்மன், கோயிலில் விளக்கு எரிப்பதற்காக 105 பொன் தானம் செய்ததையும், நந்தியம்பாக்கம் கிராமத்தார் அதைப் பெற்றுக் கொண்டதையும் கூறுகிறது. இது சிதைந்து போன சாசனம். நாயறு நாட்டு நந்தியம்பாக்கம் என்பது நந்திவர்மனுடைய பெயரால் ஏற்பட்ட கிராமம் என்று தோன்றுகிறது.23 நந்திவர்மனின் 18-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இன்னொரு சாசனம், தென் ஆர்க்காடு மாவட்டத்து திருக்கோயிலூர் தாலுகா மணலூர் பேட்டையில், காக்கா நாச்சியார் மண்டபம் என்னும் இடிந்து போன மண்டபத்தில் இருக்கிறது.24 திருவுழுதீசுவரத்து மகா தேவருக்குத் தேவமாரன் என்பவர் விளக்குக்காகப் பொன் தானம் செய்ததைக் கூறுகிறது. 18-ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் தாலுகா, திருச்சென்னம்பூண்டி, சடையார் கோவிலில் வாயிலின் வலது புறச் சுவரில் உள்ளது. சாசன வாசகம்25 1. ஸ்வஸ்தி ஸ்ரீ 2. தெள்ளாற் றெ 3. றிந்த நந்தி 4. ப் போத்தரைய 5. ர்க்கு யாண்டு 6. 18 - ஆவது தி 7. ருக் கடை முடி 8. மஹா தேவர்க் 9. கு இரண்டு நொ 10. ந்தா விளக்கினு 11. க்கு குடுத்தபொ 12. ன் அறுபதின் 13. கழஞ்சு இப்பொ |