| 264 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
பாவென மொழியினுந் தூக்கினது பெயரே. தனிநெடி றனிக்குறி லொற்றொடு வருதலென் றந்நால் வகைத்தே நேர யென்ப. 3 குறிலிணை குறிநெடி லொற்றொடு வருதலென் றந்நால் வகைத்தே நேரசை யென்ப. 4 நேரீற் ரியற்சீர் கலிவயி னிலவ வஞ்சி மருங்கினு மிறுதியி னிலவே. 5 நாற்சீர் கொண்டது நேரடி யதுவே தூக்கொடுந் தொடையொடுஞ் சிவணு மென்ப. 6 ஆசிரி யப்பா வெண்பா கலியென மூவகைப் பாவு நேரடிக் குரிய. 7 வஞ்சி விரவ லாசிரிய முரித்தே வெண்பா விரவினுங் கலிவரை வின்றே. 8 ஆசிரியப் பாவின் சிறுமைக் கெல்லை மூவடி யாகும் பெருமை யாயிரம் ஈரடி முதலா வொன்று தலைசிறந் தேழடி காறும் வெண்பாட் டுரிய வாயுறை வாழ்த்தே செவியறி வுறூஉவே கைக்கிளை அங்கதம் கலியியற் பாட்டே தத்தங் குறிப்பின வளவென மொழிப. 9 முதலெழுத் தொன்றின் மோனை யாகு மஃதொழித் தொன்றி னெதுகை யாகு அவ்விரு தொடைக்குங் கிளையெழுத் துரிய. 10 பொருளினு மொழியினு முரணுதன் முரணே. 11 இறுசீ ரொன்றி னியைபெனப் படுமே. 12 அளபெடைத் தொடைக்கே யளபெடை யொன்றும். 13 ஒன்றா தாவது செந்தொடைக் கியல்பே. 14 சீர்முழு தொன்றி னிரட்டை யாகும். 15 முதற்சீர்த் தோற்ற மல்ல தேனை |