பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்287

என்றாராகலின்”

(யாப்பருங்கலம், செய்யுளியல், 40-ஆம் சூத்திரம் விருத்தியுரை)

நேரு நிரையுஞ் சீரா யிறுதலுஞ்
சீருந் தளையுஞ் சிதைவுழிக் கொளலும்
யாவரு முணர்வர் யாவகைப் பாவினும்.     32

சீர்தளை சிதைவுழி யீருயிர்க் குறுக்கமு
நேர்த லிலவே யுயிரள பெடையும்.     33

இனி, பேராசிரியர் பெயரினால் மேற்கோள் காட்டப்பட்ட சூத்திரங்கள் வருமாறு:

நெடிலுங் குறிலு மொற்றொடு வருதலுங்
கடிவரை யிலவே நேரசைத் தோற்றம்.     1

குறிலு நெடிலுங் குறின்மு னிற்பவு
நெறியினொற் றடுத்து நிரையசை யாகும்.     2

இருசீ ரடியும் முச்சீ ரடியும்
வருதல் வேண்டும் வஞ்சி யுள்ளே.     3

அல்லாப் பாவி னடிவகை தெரியின்.     4

பேணுபொருண் முடிபே பெருமைக் கெல்லை
காணுங் காலை கலியலங் கடையே.     5

கலியுறுப் பெல்லாங் கட்டளை யுடைமையின்
நெறியின் வழி நிறுத்தல் வேண்டும்
கொச்சகக்கலி வயிற் குறித்த பொருள் முடிவாந்
தாழிசை பலவும் தழுவுதன் முடிபே.     6

அடுத்த வடியிரண் டியாவகைப் பாவினுந்
தொடுத்து வழங்கலிற் றொடையெனப் படுமே.     7

அளபெழுந் தியாப்பினஃ தளபெடைத் தொடையே.     8

ஒருசீ ரடிமுழுதும் வருவ திரட்டை.     9

ஒத்தா ழிசை துறைவிருத்த மெனப்பெயர்
வைத்தார் பா வினமென்ன வகுத்தே.     10