பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்291

‘கழிநெடி லசையுங் காலெழுத் தசையும்
பெயரயற் புணர்பினும் பெயரிடைப் புணர்ப்பினும்
வழுவென மொழிப வாய்மொழிப் புலவர்’     1

என்றாராகலின்,

‘ஆய்தமு மொற்றா யடங்கினு மாங்கதனை
ஓதினார் தொன்னூ லுணர்வுடையோர் - நீதியால்
ஒற்றா யடங்கினு முன்கால வேற்றுமையாற்
சொற்றார் மகரச் சுருக்கு.’     2

எனவும்,

‘மெய்யென்ற சொல்லானே மிக்கமக ரத்தினையும்
நையு மடங்கு நனியென்னின் - ஐயென்ப
தாவி யெனவடங்கு மஃகிற் றெனின் மகரத்
தேய்விற்கு மஃதே திறம்.’     3

எனவும் கூறினார். இன்னும் மகரக் குறுக்கத்தின் பயன் மகரப் பிர கரணத்துங் காண்க. ஈண்டு உரைப்பிற் பெருகும்.

‘உயிரென்ற சொல்லானே யொன்பதா மாவி
செயிரின்றிச் சென்றடங்கு மேனும் - பயில்புரைத்தார்
குன்றுதலா லெனனிற் குணம்புரிந்தா ரௌவுந்தான்
குன்றுதலாக் கூறப் படும்’     4

எனவும்,

‘கால விகப்பத்தாற் கட்டுரைக்கப் பட்டவற்றுண்
மூல வியனூன் முறைமையான் - ஞாலத்து
ளெல்லா மெடுத்துரைத்தார்க் காமோ சிலவெழுத்துச்
சொல்லாதார்க் காகுமோ தோம்.’     5

எனவும்,

‘அசையாக்குந் தன்மையவே யன்றித் தொடையோ
டிசையாக்கு மேளையவுஞ் சொற்றார் - இசைதொடைதோ
மாக்கு மெழுத்தனைத்துஞ் சொன்னா ரசைமுகத்தாற்
றூக்கியநூற் கேற்பத் தொகுத்து.’     6

எனவும்,