பக்கம் எண் :

292மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

‘குறிலு நெடிலு மளபெடையு மொற்று
மறிஞ ரசைக்குறுப்பா மென்பர் - வறிதே
யுயிர்மெய்யு மூவினமென் றோதினா ரென்று
செயிரவர்க்கு நின்றதோ சென்று’     7

எனவும்,

‘வடாது தெனாதென்று வைத்ததனான் மற்றாண்
டெடாதனவுஞ் சொற்றா ரினத்தாற் - கெடாததுபோன்
மஃகான் குறுக்கம் வகுத்ததனான் மாட்டெறிந்தா
ரஃகாய்தந் தானு மசைக்கு’     8

எனவும்,

‘ஐயௌமவ் வென்றிவற்றிற் காங்குற்ற ஞாபகமா
நையாது கார நடத்தாதே - மெய்யானே
கற்றாய்ந்த நூலோ ரிகரம் புணர்ந்ததூஉம்
குற்றாய்தந் தானுங் கொளற்கு’     9

எனவும்,

‘சிறப்புடைய வல்ல வெனவிவற்றுட் கொள்ப
சிறப்புடைய வென்பவே சிந்தித் - துறுப்பசைக்கட்
காலளவா மொற்றினையுங் கைக்கோடல் காரணமாக
நூலளவிற் சொற்றார் நுனித்து’     10

எனவும்,

‘ஐம்மூ வெழுத்து மசைக்குறுப்பா மென்பதன்கண்
உம்மைதா மெச்ச மெனவுரைப்பர் - ஐம்மூன்றின்
மிக்கனவுங் கைக்கோடல் வேண்டி வியன் பொருளை
மெய்ப்படுக்கு மாங்கே விதப்பு.’     11

எனவும்,

‘மகரக் குறுக்கம் வகுத்ததுதா னாய்தற்
கிகரக் குறுக்க முதலாப் - புகரற்ற
நாலொன்று மெண்ணாதே நாட்டுதன் ஞாபகமாய்
நூலொன்றி நிற்றற் பொருட்டு’     12