பக்கம் எண் :

308மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

பண்ணல்

வலக்கைப் பெருவிரல் குரல்கொளச் சிறுவிரல்
விலக்கின் றிளிவழி கேட்டும் ... .. ... .. ...
இணைவழி யாராய்ந் திணைகொள முடிப்பது
விளைப்பரு மரபிற் பண்ண லாகும்.     1

பரிவட்டணை

பரிவட் டணையி னிலக்கணந் தானே
மூவகை நடையின் முடிவிற் றாகி
வலக்கை யிருவிரல் வனப்புறத் தழீஇ
உடக்கை விரலி னியைவ தாகத்
தொடையொடு தோன்றியுந் தோன்றா தாகியு
நடையொடு தோன்று நயத்த தாகும்.     2

ஆராய்தல்

ஆராய்த லென்ப தமைவாக் கிளப்பிற்
குரன்முத லாக விணைவழி கேட்டு
மிணையி லாவழிப் பயனொடு கேட்டுந்
தாரமு முழையும் தம்மிற் கேட்டும்
விளரி கைக்கிளை விதியுளிக் கேட்டுந்
தளரா தாகிய தன்மைத் தாகும்.     3

தைவரல்

தைவர லென்பது சாற்றுங் காலை
மையறு சிறப்பின் மனமகிழ் வெய்தித்
தொடையொடு பட்டும் படாஅ தாகியு
நடையொடு தோன்றி யாப்புநடை யின்றி
யோவாச் செய்தியின் வட்டணை யொழுகிச்
சீரேற் றியன்று மியலா தாகியும்
நீரவாகு நிறைய தென்ப.     4

செலவு

செலவெனப் படுவதன் செய்கை தானே
பாலை பண்முறை திறமே கூடமென
நால்வகை யிடத்து நயத்த தாகி