பக்கம் எண் :

நேமிநாதம் - நந்திக் கலம்பகம் - பிறநூல்கள்27

வினையிருள் போழ்வன மிசையல சோதியை விலையுமி லாதனதா
மனையமு மாமணி யருளின மாள்கொளு மரிகுல நாயகரூர்
நனையணி ஞாழலி னறைகமழ் வீகளை வரியளி தும்பிகள் சேர்?
தினையெனு மீமிசை சிறுதுளி ரேதரு திருமயி லாபுரியே.     6

உவ்வுடை நாண்மதி யொளிமுக வாணுதல் உழைவிழி யேழையர்மேல்
அவ்வுடை யாரரு நாருடை யாரெனு மரிகுல நாயகரூர்
நவ்வுடை யார்துகி னகிவினை யோதிம நடைநறை நாறுகுழல்
இவ்வுடை யாமொழி யவர்மலி பொன்மலி திருமயி லாபுரியே.     7

பவகத மாகிய பகைபசி நோய்பல பழவினை வேரறுவித்
தவகத மாகிய வகிலவ சோகுடை யரிகுல நாயகரூர்
சிவகதி யேதரு தொழுபவர் தீவினை சேரவி லக்கிவிடுந்
திவதொனி யேமொழி பவரிட மாநில திருமயி லாபுரியே.     8

புயலொரு பூமிசை வருமென வானவர் புதுமலர் தூயவர்மேல்
அயலிரு சாமரை குலாவ வுலாவு மரிகுல நாயகரூர்
இயலிசை தேர்பவ ரிருநிதி யீபவர் இருடிகள் யாவருநற்
செயலவி ரோதிகள் திருவுடை யாரறி திருமயி லாபுரியே.     9

முற்றும்.

அடிக்குறிப்புகள்

1, பதிகத்தில் பத்துப்பாட்டுக்கள் இருக்க வேண்டும். ஆனால் ஏட்டுப் பிரதியில் 10-வது பாட்டு, காணப்படவில்லை.