28 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 19 |
திருமயிலாப்பூர் பதிகம் - 2 உலர்தழைப்ப வொளிதிகழ்மூ வாமதிமுக்குடையானை யடலாராழி வலர் தழைக்கும் வண்மயிலை மன்னவனை மணியைமுன்னா ளலர்தவத்தின் பொருள்நாடி வேசத்துபாசத்தே யழுந்தி யந்தோ நிலர்தொகுத்துக் குண்டிகையை நிறைப்பான்போ லமர்ந்திருந்த நீசனேனே. 1 எல்லிருக்கு மணிமுடிசாய்த் திந்திரரு நரேந்திரரு மெல்லை யில்லாச் சொல்லிருக்குந் துறவோருந் தொழுமயிலாப் புரிநின்ற துணையை முன்னாள் மல்லிருக்கு மலர்கொண்டு வணங்காதே மாதரார் வலைப்பட்டந்தோ யில்லிருக்க நல்லறஞ்செய்யா திறுமாந் திட்டிருந்த வேழையேனே. 2 முதிர்முகிலிற் புலியரவ முரசியம்ப முனிகணமு முறையினேற்ற வதிர்முழவக் கடல்நடு வண்டந்தரமே வந்துதிரு மயிலைநின்ற சதுமுகனைத் தாழாதே தத்துவத்தின் றன் மையினைத் தவிர்ந்து நாளும் கதிர்புறம்பாய்ப் பேர்த்ததுகண் கருத்தரியா தொழிந்ததகலுந் தீயனேனே. 3 |