நேமிநாதம் - நந்திக் கலம்பகம் - பிறநூல்கள் | 29 |
தாட்டவிழ் தாமரை நடந்ததத்துவனை முத்திமுதற் பொருளையென்றும் வாட்டமிலா வளமயிலை வரதன்பால் வந்தணுகி யன்னாளின்னாள் யீட்டமுடன் மலர்கொண்டாங் கிறைஞ்சாதே மறஞ்சாய்ந்த வகையே பேணிக் காட்டநிலா வெரித்தாதோ கண்படாப்போந் திருந்தவா கள்வனேனே. 4 பூச்சரிக்கும் பொன்னடியெம் புங்கவனை புனையகலம் பொருந்து நூல்கள் நாச்செரிக்கும் வகைதெரிந்த நாண்முதலாய் நன்மயிலை நண்ணிநானிப் பாச்சரிக்கும் வகையறிந்து பாடாதே பாவையர்தம் பயனேபார்த்து பேய்ச்சுரைக்கு நீரிறைத்துப் பெரிதாய பிழைசெய்தேன் பித்தனேனே. 5 பூத்தேரும் பொன்னடியெம் புங்கவனைப் பொன்னெயில்மூன் றுடையகோனை மாத்தேருந் தளிர்மருகில் மன்னுனூ மயிலா புரியில் நின்றமாலை நாத்தேரு முறையதனால் நவிலாதே நடலைவாழ் வ தனைநத்திப் பேய்த்தேரை நீரென்று பின்னோக்கித் திரிந்தவா பித்தனேனே. 6 பொழிலிறைப்பூஞ் சினைப்பிண்டிப் பொன்னெயிலு ளிருந்தானை வினைகளெல்லாம் வழிப்படுத்தி வென்றானை வளமயிலை யச்சுதனை வுன்னாமுன்னாள் பழிப்படுக்கும் பாவங்கள் பலசெய்து பலகதிக்கோர் பயனுமின்றி வழிகிடக்க வூர்தோறும் நுழைந்துமயக் குற்றுதவா மதியிலேனே. 7 |