30 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 19 |
அடல்வலையும் வெந்திறலா லனங்கனெனு மலராசை யகத்திப்பூக மடல்வலையப் பொழில்மயிலை மரகதமா மலைதன்னை யன்னாளின்னாள் உடல்வலைய முறப்பணித்தங் கொண்பொருளை யோராதே பிறவியென்னுங் கடல்வலையங் கைநீந்திக் கரைகாணக் கருதினேன் கபடனேனே. 8 பொற்றலைவிற் பொலிகவர மலர்ப்பொடியை யிளந்தென்றல் புகுந்துவீச மற்றலரு மணியணை மேல் மதிவட்டக் குடைநிழற்கீழ் மயிலைமன்னி சொற்றலையிற் றுன்பறுக்குந் துறவோனை யறவோனைத் தொடராமுன்னாள் புற்றலையிற் றவிடுகுத்திப் புந்தியேன் சிந்தியவா பொறியற்றேனே. 9 அமைச்சிந்தித் தருநகரத் தாழ்ந்தழுந்தி வீழாம லடைந்தோர்க் கெல்லாம் சமைந்திந்த வகத்திருந்த மடமயிலை அச்சுதனைச்சாரா முன்னா ளெமைதிண்ண முடையவர்மற் றிவரவ ரென்றவரொ டெழுந்துகத்தி உமிதின்னும் பெருபயனா லுனைநினையா துலகலைந்தே னேழையேனே. 10 முற்றும் |