பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்127

    நொந்தது புண்ணா யென்னுளங் கேட்க.
மெய்ச்சுகம் இதுவாம்! விளம்புவ தென்னினி?
இச்சண் டாளனும் வாணியும்! ஏற்கும்!
  85 ஒருபிடி யாயவன் உயிரினை வாங்க
ஓடிய தெண்ணம்; உறுத்தின தென்கை!
தீண்டவும் வேண்டுமோ தீயனை?
என்னிவன் அனந்தைக் கேகுங் காரியம்?
யாருடன் வினவ? நாரணனோ அது?
   

(நாராயணன் வர)

  90 வாவா, நாரணா!
நாராயணன்:  

ஏ! ஏ! என்னை!

    சினந்தனை தனியாய்?
நட:  

ஏன் இத் தீயவன்

நட:   அனந்தைக் கேகுங் காரணம்?
நாரா:  

யார்? யார்?

நட:   அறிவை! நீவிளை யாடலை; அறைதி.
நாரா:   வதுவை மனோன்மணி தனக்கு வழங்கிட ...
நட: 95 அதுவும் நன்றே! கெடுவனிவ் வரசன்!
நாரா:   அடுத்தது வாணியின் மணமும், அறைந்துளேன்
நட:   விடுத்திடவ் வெண்ணம்; தடுக்கையா னறிவன்;
விடுத்தனன் கண்டும்; எரித்திடு வேன்நொடி.
உறுதியொன் றுளதேல்! உரையாய் நடந்தவை.
நாரா: 100 முதியவ ருசிதனுக் குரைக்க மற்றவன்
வதுவையவ் வழியே யாற்றிட வாணியை
அதட்டினன்.
நட:   அதற்கவள்?
நாரா:   மறுத்தனள்.
நட:   எங்ஙனம்?
நாரா:   ‘இறக்கினும் அதற்கியா னிசையேன்’ என்றாள்.
நட:   அரைக்கண முன்னம் அறிந்திலே னிம்மொழி.


அனந்தை - திருவனந்தபுரம், சேரவேந்தனின் தலைநகரம். அறைதி - சொல்லுக. உசிதன் - பாண்டியன்.