242 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
| | பொடிப்போஞ் சிர முடைப்போம் பொடி பொடிப்போம் வசை துடைப்போ முயிர் குடிப்போம் வழி தடுப்போம் பழி முடிப்போ மினி நடப்போம் நொடி, எனவாங்கு, பெருமுர சதிரப் பெயருமின் கருமுகில் ஈர்த்தெழும் உருமென ஆர்த்தே. | | | (படைகள் முரசடித்து நடக்க, படைப்பாணர் பாட) | | | (கலித்தாழிசை) | படைப்பாணர்: | | தந்நகர மேகாக்கச் சமைந்தெழுவோர் ஊதுமிந்தச் சின்னமதி சயிக்குமெமன் செருக்கொழிமின் தெவ்வீர்காள்! சின்னமதி! சயிக்குமெமன் எனச்செருக்கி நிற்பீரேல், இன்னுணவிங் குமக்கினிமேல் எண்ணீரே எண்ணீரே இசைத்துளோமே. 1 | படைகள்: | | ஜே! ஜே! | பாணர்: | | மறுகுறுதம் ஊர்காக்கும் வயவர்புய மேவிஜயை உறைவிடமா இவர்வாளென் றோடிடுமின் தெவ்வீர்காள்! உறைவிடமா? இவர்வாளென்றோடிடீர் ஆயினினி மறலிதிசை ஒருபோதும் மறவீரே மறவீரே வழங்கினோமே. 2 |
பெயருமின் - புறப்படுங்கள். உருமு என ஆர்த்து - இடி போல ஆரவாரித்து. கலித்தாழிசை 1. ஊதும் இந்தச் சின்னம் - ஊதுகின்ற இந்த எக்காளம். சயிக்கும் - வெல்வான். எமன் - எம் மன், எங்கள் அரசன் (இடைக் குறை). தெய்வீர்காள் - பகைவர்களே. சின்னமதி - சிற்றறிவு. இன் உணவு - இனிய சாப்பாடு. இசைத்துளோம் - சொன்னோம். கலித்தாழிசை 2. வயவர் - வீரர். புயம் மேவி - தோளில் தங்கி. ஜயை - வெற்றி மடந்தை, ஜயலட்சுமி. இவர்வாள் - ஏறி இருப்பாள். |