| நடர்: | | கோட்டை காக்கும் படைஞர். (நேரிசை ஆசிரியப்பா) |
| முதற் படைஞன்: | | இப்படை தோற்கின் எப்படை ஜயிக்கும்? எப்படி இருந்த திராஜன் பேச்சு! கல்லும் உருகிக் கண்ணீர் விடும். இப் புல்லும் கேட்கிற் புறப்படும் போர்க்கு. |
| 2-ம் படை | | முற்றும் கேட்டைகொல்? |
| முதற் படை: | | முற்றும் கேட்டேன். சற்றும் மனமிலை திரும்புதற் கெனக்கு. சரியல ஆணையில் தவறுதல் என்றே வெருவிநான் மீண்டேன். இலையேல் உடன்சென் றொருகை பார்ப்பேன். ஓகோ! சும்மா |
| | 10 | விடுவனோ? பார்க்கலாம் விளையாட் டப்போது. என்செய! என்செய! எத்தனை பேரையான் பஞ்சாய்ப் பறத்துவன்! துரத்துவன்! பாண்டியில் வஞ்சவிவ் வஞ்சியர் என்செய வந்தார்? |
| | | நெஞ்சகம் பிளந்திந் நெடுவாள் தனக்குக் |
| | 15 | கொஞ்சமோ ஊட்டுவன் குருதி! என்செய! நினைதொறும் உடலெலாம் தின்பது தினவே! பாக்கியம் இல்லையென் கைக்கும் வாட்கும்! |
வெருவி - அஞ்சி. பஞ்சாய்ப் பறத்துவன் - பஞ்சுபறப்பது போலப் பறக்கச் செய்வேன்.