பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்245

2-ம் படை பாக்கியம் அன்றது. பறைப்பயல் பாவி
குடிலனோ டுலாவும் கோணவாய்க் கொடியன்,
 20சடையன், தலைவனோ டெதுவோ சாற்றித்
தடுத்தே நமையெலாம் விடுத்தான் இப்பால்.
3-ம் படை: கெடுத்தான் அவனே என்னையும். அன்றேல்
முடித்தே விடுவனென் சபதம் முற்றும்.
சண்டிஅச் சங்கரன் வந்துளான் சமர்க்கு.
 25கண்டேன். கையிற் கிடைக்கிற் பண்டென்
தாயையும் என்னையும் சந்தையிற் பழித்த
வாயினை வகிர்ந்து மார்பினைப் பிளந்து...
  (வாய்மடித்துப் பற்கடிக்க)
4-ம் படை வஞ்சியர் அனைவரும் மானமில் மாக்கள்.
பிஞ்சிற் பழுத்த பேச்சினர். யானெலாம்
 30நன்றா யறிவன். ஒன்றார் என்னுடன்.
சென்றுளேன் ஜனார்த்தனம். கண்டுளேன் வைக்கம்.
3-ம் படை: விடுவேன் அல்லேன். அடுபோர் முடியினும்
நடுநிசி ஆயினும் அடுகள முழுவதும்
தேடுவன்; சங்கரன் செத்தான் ஆயினும்
 35நாடி யவன் தலை நசுக்கி மிதித்து
வாயிடை நெடுவேல் இறக்கி...
முதற் படை: சீ! சீ!
  சேவக னாநீ! செப்பிய தென்னை!
யாவரே பிணத்தோ டாண்மைபா ராட்டுவர்?
பிணமோ பிணத்தோ டெதிர்க்க!


சடையன் - குடிலனுடைய சேவகன். சாற்றி - சொல்லி. வகிர்ந்து - கீறி, பிளந்து. ஒன்றார் - சேரமாட்டார். ஜனார்த்தனம், வைக்கம் - இவை சேர (மலையாள) நாட்டில் உள்ள ஊர்கள்.