| சுந்: | 145 | நல்லது! முகமன் நவின்றனை. நிற்க. சொல்லிய சுருங்கை உனக்குமிவ் விடுக்கணில் உதவுமோ அன்றோ உரைக்குதி விரைந்தே. |
| ஜீவ: | | அடியேன் ஆசை திருவடி அறியும். கடிபுரி விடிலுயிர் நொடியுமிங் கிராது. |
| | 150 | பாண்டியர் குலமெனும் பாற்கடல் உதித்த காண்டகு கன்னியை இவ்வழி உன்திரு உளப்படி கொடுபோய் அளித்தரு ளுதியேல், இந்துவின் குலமெனும் முந்திய பெயர்போய்ச் சுந்தரன் குலமெனச் சந்ததம் வழங்கும். |
| | 155 | நீங்கா திதுகா றென்னுளம் நிறைந்த தாங்காப் பெருஞ்சுமை தவிர்தலால் யானும் ஒருமனம் உடையனாய் மறலியும் வெருவ ஆற்றுவன் அரும்போர். அதனிடை யமபுரம் ஏற்றுவன் எங்குலம் தூற்றிய சேரனை; |
| | 160 | வென்றிடின் மீளுவன். அன்றெனிற் பண்டே அனையிலாத் தனையளுக் கம்மையும் அப்பனும் தயாநிதி! நின்றிருச் சரணமே என்ன வியாகுல மறவே விடுவனென் உயிரே. |
| சுந்தர: | | விடுகிலை, ஆகினும் வெளிக்கடல் ஓட்டம். |
| | 165 | நடுநிசி நாமினி வருகுதும். கொடிய கடிபுரிக் கனலிடைக் காய்ந்திடும் உன்றன் சிறுகொடி மறுவிடம் பெயர்த்துதும், சிறந்த அந்தமில் செழியரைத் தந்திட உரித்தே. |
| | | (எழுந்து) |
| ஜீவ: | | கட்டளைப் படியே? கட்டிய கற்படை |
| | 170 | கண்டிட ஆசையொன் றுண்டடி யேற்கு. |
அளித்தருளுதியேல் - காத்தருளினால். சந்ததம் - எப்பொழுதும். மறலி - யமன். சிறுகொடி - சிறிய பூங்கொடி போன்ற மனோன்மணி.