| 322 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
| மனோ: | | ஒத்ததே யார்க்கும். மேம்படக் கருதிடில் ஓம்புதி நீயும். | | | 140 | அடுத்தவர் துயர்கெடுத் தளித்தலே யானிங்கு எடுத்தநற் றவத்தின் இலக்கணம் ஆதலின், நடேசனை நச்சுநின் நன்மணம் அதுவும் விடாதெனை அடுத்த வீரநா ரணன்றன் கடுஞ்சிறை தவிர்த்தலும் கடனெனக் கருதி | | | 145 | எழுதினேன். இஃதோ! வழுதியும் இசைந்தான். என்கடன் இதுவரை: இனியும் இச்சை. | | வாணி: | | ஆயிடிற் கேட்குதி அம்மணீ! என்சூள். கண்டவர்க் கெல்லாம் பண்டைய வடிவாய் நீயிவண் இருக்க நின்னுளம் வாரி | | | 150 | வெள்ளிலா மெள்ள விழுங்கி இங்ஙனம் வேதகம் செய்த போதக யூதபம்; பேரிலா ஊரிலாப் பெரியோன் அவன்றான் யாரே ஆயினும் ஆகுக. அவனைநீ அணையுநாள் அடியேன் மணநாள். அன்றேல், | | | 155 | இணையிலா உன்னடிக் கின்றுபோல் என்றும் பணிசெயப் பெறுவதே பாக்கியம் எனக்கு. |
அளித்தல் - காத்தல். சூள் - சபதம். வெள்ளில் - விளாமரம். இங்கு விளாம்பழம் என்பது கருத்து. யானை நோய் என்பது விளாம் பழத்துக்கு உண்டாகும் நோய். இந்நோய் கொண்ட விளாங் கனிக்குள் சதைப்பற்று இராது. ஓடு மட்டும் இருக்கும். இதனை “யானை யுண்ட விளாங்கனி” என்று கூறுவர். வேதகம் செய்த - வேறு படுத்திய. போதகம் - யானை. யூதபம் - யானைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் யானை. போதகயூதபம் - என்பது அரச யானை போன்றவன் என்பது பொருள். இது மனோன்மணியின் மனத்தைக் கவர்ந்த காதலனைக் குறிக்கிறது. “வெள்ளிலா மெள்ள விழுங்கி யிங்ஙனம், வேதகம் செய்த போதக யூதபம்” என்னும் அடியின் கருத்து: யானையுண்ட விளாங்கனியில் ஓடு தவிர உள்ளே சதை இல்லாதிருப்பது போல, மனோன்மணியின் மனத்தைக் கவர்ந்து அவளை வெற்றுடம்பினளாக்கியது அவள் கனவில் கண்டு காதலித்த அரசனாகிய யானை என்பது. |