| பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 323 |
| | | கடமையும் பிறவும் கற்றறி யேன்விடை மடமையே ஆயினும் மறுக்கலை மணியே! | | மனோ: | | பேதைமை அன்றோ ஓதிய சபதம்? | | | 160 | ஏதிது வாணி! என் மணம் தனக்கோ இனியரை நாழிகை. இதற்குள் ஆவதென்? அன்பின் பெருக்கால் அறைந்தனை போலும். மன்பதை உலகம் வாஞ்சா வசமே. | | வாணி: | | உடலலால் உயிரும் விழியலால் உணர்வும் | | | 165 | கடபட சடமலாற் கடவுளும் இலையேல் வேண்டிய விளைக! விசனமென்? அன்றேற் காண்டியவ் வேளை கருணையின் இயல்பே. 1 | | | | (இருவரும் போக) |
ஐந்தாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.
வாஞ்சாவசம் - அன்பின் வழிபட்டது. கடபட சடம் - (கடம் - குடம். படம் - துணி. சடம் - உடம்பு) தர்க்கவாதிகள் உபயோகப்படுத்தும் சொல்; ஆரவாரப் பேச்சு என்பது கருத்து. |