பக்கம் எண் :

324மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

மூன்றாம் களம்

இடம் : அரண்மனையில் மணமண்டபம்.

காலம் : நடுநிசி.

(அமைச்சர் படைவீரர் முதலியோர் அரசனை எதிர்பார்த்து நிற்க)

(நிலைமண்டில ஆசிரியப்பா)

  முதற்படைத் தலைவன்:
அடிகள்பின் போயினர் யாவர்? அறிவீர்.
2-ம் படை நடரா சனைநீர் அறியீர் போலும்!
முதற்படை அறிவேன். ஆ! ஆ! அரிவையர் யாரே
வெறிகொளார் காணில்! வீணில் வாணியைக்
 5கெடுத்தான் கிழவன்.
3-ம் படை: அடுத்ததம் மணமும்!
தெரியீர் போலும்!
முதற்படை தெரியேன், செய்தியென்?
3-ம் படை: கோணிலா நாரணன் கொடுஞ்சிறை தவிர்த்தலும்.
  வாணியின் மனப்படி மன்றல் நடத்தலும்
இவ்வரம் இரண்டும் அம்மணி வேண்ட
 10அளித்தனன் அனுமதி களிப்புடன் அரசன்.
முதற்படை இருதிரை இட்டவா றிப்போ தறிந்தேன்.
ஒருதிரை வாணிக்கு ஒருதிரை மணிக்கே.
3-ம் படை: எத்திரை தாய்க்கென் றியம்புதி. கேட்போம்.


கோண்இலா - கோணல் இல்லாத, நேர்மை உடைய. அம்மணி - மனோன்மணி.