முதற்படை | | இத்திரை தாய்க்காம். |
3-ம் படை: | | சீ! சீ! அத்திரை. |
2-ம் படை | | எத்திரை ஆயினென்? ஏனிரை கின்றீர்? |
முதற்படை | | இருதிரை வந்தவா றிதுவே ஆயினும் ஒருதிரைக் கொருதிரை எத்தனை தூரம்? |
3-ம் படை: | | அதோ அவன் அறிகுவன். அறிந்திதோ வருவேன் |
| | (3-ம் படைஞன் மற்றோரிடம் போக) |
முதற்படை | | ஐயோ! பொய்யறும் அன்னையம் மணிக்கும் |
| 20 | பொய்யன் பலதே வனுக்குமோ பொருத்தம்? |
2-ம் படை: | | வருத்தமேன் உனக்கு? மன்னன் திருவுளக் கருத்தனு சரித்துநாம் காட்டலே கடமை |
| | (3-ம் படைஞன் மீண்டும் வர) |
3-ம் படை: | | (முதற்படைஞனை நோக்கி) |
| | இப்புறம் வருதி. செப்புவன் ரகசியம். சத்தியம் செய்தபின் சாற்றினன். நீயும் |
| 25 | எத்திறத் தோர்க்கும் இயம்பலை. பத்திரம்! அத்திரை மணத்திற் கன்று. மற் றப்புறம் நெருங்கிய சுருங்கையொன் றுளதாம். அவ்வழி செல்லில் வெகுதொலை செலுமாம். இப்போர் வெல்லும் வரையும் அவ்வழி மணந்தோர் |
| 30 | இருவரும் எய்திவாழ்ந் திருப்பராம். |
முதற்படை: | | சரி! சரி! |
| | பொருவரும் புத்திமான் குடிலன். எத்தனை விரைவினிற் சமைத்தான்! வெகுதிறம் உடையான். |
காட்டல் - பாவனை செய்தல். அவ்வுழி - அந்த இடம். பொருவரும் - ஒப்பில்லாத.