3-ம் படை: | | இப்போ தன்றது; நகரா ரம்பம் எப்போது அப்போ தேவரும் துயரம் |
| 35 | கருதிமுன் செய்தனன். |
முதற்படை: | | ஒருவரும் அறிந்திலம்! |
| | (முருகன் வா) |
3-ம் படை: | | யாரது, முருகனோ? நாரணன் எங்கே? |
முருகன்: | | நாரணன் அப்புறம் போயினான்; வருவன். |
3-ம் படை: | | பிழைத்தீர் இம்முறை. |
முரு: | | பிழைத்திலம் என்றும்! |
3-ம் படை: | | அத்திரைச் செய்தி அறிவாய். வைத்ததார்? |
முரு: | 40 | வைத்தது ஆராயினென்? வெந்தது வீடு! |
| | (இருவரும் நகைக்க) |
2-ம் படை | | வாயினை மூடுமின். வந்தனன் மணமகன். |
முரு: | | ஈயோ வாயில் ஏறிட நாயே! |
முதற்படை | | அரசனும் முனிவரும் அதோவரு கின்றர்! |
| | (ஜீவகன், சுந்தரமுனிவர், கருணாகரர், நிஷ்டாபரர், பலதேவன், நடராசன், நாராயணன் முதலியோர் வர) |
ஜீவ: | | இருமின் இருமின்! நமர்காள் யாரும்! |
| | (ஜீவகன், முனிவர் முதலியோர் தத்தம் இடத்திருக்க) |
| 45 | கொலுவோ கொல்லிது! மணவறை! இருமின். பலதேவ ரேநும் பிதாவிது காறும் வந்திலர் என்னை? |
பலதே: | | மன்னவர் மன்ன! |
| | அந்தியிற் கண்டேன் அடியேன். அதன்பின் ஒருவரும் கண்டிலர். தனிபோ யினராம். |
பிழைத்தீர் - உய்ந்தீர். பிழைத்திலம் - தவறு செய்தோமில்லை. வெந்தது வீடு - குடி கெட்டது. நமர்காள் - நம்மவர்களே.