பக்கம் எண் :

328மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

ஜீவ: 70என்குலம் காக்க எனவருள் பழுத்துக்
கங்கணம் கட்டிய கருணா நிதிகாள்!
மனத்திறந் தாழ்ந்த மதிமந் திரிகாள்!
எனக்கென உயிர்வாழ் என்படை வீரர்காள்!
ஒருமொழி கூறிட அனுமதி தருமின்.
 75ஆடையின் சிறப்பெலாம் அணிவோர் சிறப்பே;
பாடையின் சிறப்பெலாம் பயில்வோர் சிறப்பே;
எள்ளரும் மதிகுலச் சிறப்பெலாம், எமர்காள்!
கள்ளமில் நும்முனோர் காப்பின் சிறப்பே.
ஆதலில் உமக்குப சாரம்யான் ஓதுதல்.
 80மெய்க்குயிர் கைக்குநா விளம்புதல் மானும்.
ஈண்டுகாத் திடுவல்யான் எனக்கடன் பூண்டதும்
மதிகுல மருந்தாய் வாய்த்தஎன் சிறுமி
விதைபடும் ஆலென விளங்கினள். அவளைக்
காத்திடும் உபாயம் கண்டிட இச்சபை
 85சேர்த்தனன் என்பது தெரிவீர் நீவீர்.
இன்றுநாம் பட்டதோர் இழுக்கிவ் வைகறை
பொன்றியோ வென்றோ போக்குவம் திண்ணம்.
ஒருகுலத் தொருவன் ஒருமரத் தோரிலை.
அப்படி அன்றுநம் கற்பகச் சிறுகனி!
 90தப்பிடின் மதிகுலப் பெயரே தவறும்.
அரியவிச் சந்தியைப் பெரிதும் கருதுமின்.
இருந்திடச் சிறியள்: அபாயம்! தனியே
பிரிந்திடப் பெரியள்: பிழை!அஃ தன்றியும்
குலமுடி வெண்ணிக் குலையுநம் உளத்திற்
 95கிலையத னாலோர் இயல்சமா தானம்.
ஆதலில் அரியதற் காலத் தியல்பை
யாதென நீவிர் ஆய்ந்தியான் இப்போ
தோதிடும் உபாயத் தாலுறு நன்மையும்
தீமையும் நன்றாய்த் தெரிந்து செப்புமின்!
 100குடிலனை அறியார் யாரிக் கொற்றவை?


மனத்திறம் - மனவலிமை. எள்ளரும் - இகழ்தல் இல்லாத, குற்றமற்ற, மானும் - ஒக்கும், ஆல் - ஆலமரம். பொன்றியோ - உயிர் விட்டோ. சந்தி - காலம், நிலைமை. கொற்றவை - அரசசபை.