2-ம் படை: | | குடிலனை அறியுமே குவலயம் அனைத்தும். |
ஜீவ: | | அறிந்திடில் இறும்பூ தணையார் யாவர்? மதியுளார் யாரவன் மதியதி சயித்திடார்? நெஞ்சுளார் யாரவன் வன்திறற் கஞ்சார்? |
| 105 | யார்வையார் அவனிடத் தாரா ஆர்வம்? உண்மைக் குறைவிடம்; திண்மைக் கணிகலம். சத்திய வித்து: பத்தியுன் மத்தன். ஆள்வினை தனக்காள்; கேள்விதன் கேள்வன். ஏன்மிக? நமர்காள்? இந்நடு நிசியிலும் |
| 110 | யானறி யாதுழைக் கின்றனன் எனக்கா. நன்றே இங்கவன் இலாமையும் : அன்றேல் தற்புகழ் கேட்க அற்பமும் இசையான். |
புரு: | | (தனதுள்) |
| | எத்தனை களங்கமில் சுத்தன்! கட்டம்! |
ஜீவ: | | பற்பல பாக்கியம் படைத்துளர் பண்டுளோர். |
| 115 | ஒப்பரும் அமைச்சனை இப்படி ஒருவரும் முன்னுளோர் பெற்றிலர்; பின்னுளார் பெறுவதும் ஐயமென் றுரைப்பேன். அன்னவன் புதல்வன் மெய்ம்மையும், வாரமும் வீரவா சாரமும், பத்திசேர் புத்தியும், யுத்திசேர் ஊக்கமும் |
| 120 | உடையனாய் அடையவும் தற்பிர திமைபோல், இனியொரு தலைமுறை தனிசே வகஞ்செய இங்குவீற் றிருந்திலன் ஆயின், எமர்காள்! எங்குநீர் கண்டுளீர் இச்சிறு வயதிற் பலதே வனைப்போற் பலிதமாம் சிறுதரு? |
2-ம் படை: | 125 | இலையிலை எங்கும்! இவர்போல் யாவர்! |
ஜீவ: | | எனதர சுரிமையும் எனதர சியல்பும் தமதார் உயிர்போல் தாம்நினைத் திதுவரை எவ்வள வுழைத்துளார் இவ்விரு வருமெனச் |
வன்திறல் - மிகுந்த வல்லமை. திண்மை - பலம், வலி ஆள்வினை - முயற்சி. வாரம் - அன்பு. அடையவும் - முழுவதும். பலிதம் - பலன் தருவது.