1.6 தொகுப்புரை

சொல் என்றால் அது பொருள் தர வேண்டும். தமிழில் ஓர் எழுத்து மட்டுமே தனித்து நின்று பொருள் தந்து சொல் ஆகிறது. சொற்கள் இலக்கண நோக்கில் பொதுவாகப் பெயர், வினை, இடை, உரி என நான்கு வகைப்படும். இவற்றுள் இடைச்சொல் பெயரையும் வினையையும் சார்ந்து இயங்கும் தன்மை உடையது. இடைச்சொல் எட்டு வகைப்படும்.


தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1)
இடைச்சொல்லின் இலக்கணத்தைத் தொல்காப்பியம் எந்த அதிகாரத்தில் எந்த இயலில் கூறுகிறது?

[விடை]

2)
இடைச்சொல் - பெயர்க் காரணம் கூறுக. [விடை]
3)
இடைச்சொல் எவ்வகைச் சொற்களைச் சார்ந்து நடக்கும் தன்மை உடையது?
[விடை]
4)
குழையன் என்ற பெயர்ச்சொல்லில் இடம் பெற்றுள்ள இடைச்சொல் யாது?
[விடை]
5)
இடைச்சொல் எத்தனை வகைப்படும்? [விடை]