இருபதாம் நூற்றாண்டில் வானொலி,
இதழ்கள், தொலைக்காட்சி, திரைப்படம், பாட நூல்கள், அறிவியல் வளர்ச்சி
போன்றவற்றின் காரணமாகத் தமிழ் மாற்றம் பெற்றது. மேனாட்டார் வரவாலும்
அச்சு இயந்திர வருகையினாலும் நிகழ்ந்த உரைநடை வளர்ச்சியின் காரணமாகவும்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் மாற்றம் பெற்று வளர்ந்தது. |