கையில் பொருள் இல்லாதவர்க்கும்,
புலனடக்கம் இல்லாதவர்க்கும், கல்வியில்லாதவர்க்கும், எத்தகைய துன்பங்கள்
வரும் என்பதனை இன்னா நாற்பது குறிப்பிடுகிறது.
கணவன் மனைவி உறவில் - பெற்றோர் உறவில் எவை இன்னாதவை என்றும் எடுத்துரைக்கிறது.
மேலும் அரசனுக்கும், சமுதாயத்திற்கும் பொதுமக்களுக்கும் இன்னா பயப்பனவை
பற்றிய செய்திகளும் கூறப்படுகின்றன. இவை இந்தப் பாடத்தின் முதல் பகுதியில்
கூறப்படுகின்றன.
கல்வி, அறச்செயல்கள், நட்பு ஆகியவை எவ்வகையில் இனிமை
பயப்பனவாக உள்ளன என்பதனை இனியவை நாற்பது கூறுகிறது.
கணவன் மனைவிக்கு
இடையிலான ஒற்றுமையின் வாயிலாகக் கிடைக்கும் இன்பம், பெற்றோரைப் பேணுதலால்
கிடைக்கும் இன்பம், அரசன், குடிமக்கள்
ஆகியோரின் செயல்களால் கிடைக்கும் இன்பம் ஆகியவற்றைப் பற்றியும் இனியவை
நாற்பது கூறுகிறது. இக்கருத்துகள் இந்தப் பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
|