3.4 காப்பிய வருணனை காப்பியங்களில் கதையைத் தொடங்குவதற்கு முன் கதைத் தலைவர், நாட்டு இயற்கைக் காட்சிகள், மலை, கடல், ஆறு, நாடு, நகரம், பொழுதுகள், சூரிய சந்திர உதயங்கள் ஆகியவற்றை நயம்பட வருணித்துப் பாடுதல் இன்றியமையாததாகும். இவற்றுள் சில கதையின் இடையிடையே வருதலும் உண்டு. எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் காணலாம் : தண்டியலங்காரத்தில் கடல் வருணனை எனக் குறிக்கப் பெறினும், ஆற்று வருணனையையே காப்பியங்களில் மிகுதியாகக் காண முடிகின்றது.
(புல்லிய = பொருந்திய சரயு நதியானது முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைநிலங்களில் பாயும் நிலையில் அடித்து வரும் பொருள்களால் திணைப் பொருள்களையே மாற்றி விடுகின்றது. இது விதிவழியே உயிர்களின் செயல்கள் நடைபெறுவதுபோல் உள்ளது.
(தெங்கு = தேங்காய் தேங்காய், பாக்கின் மீதும், பலாக்கனியின் மீதும், தேமாங்கனியின் மீதும் முறையே வீழ்ந்து புகழ்சேர்க்கும் என்பது பொருள். ஏமாங்கத நாட்டுவளம் இவ்வாறு பேசப் படுகிறது.
(சுறவு = சுறாமீன் பேரொலியை உடைய நகர், வீரர் சுறாமீனாகவும், கொடி அலைகளாகவும், மாளிகைகள் மரக்கலமாகவும், மகளிர் அமுதமாகவும் அமைய ஒரு கடல்போல அமைகின்றது.
(காலன் = எமன் சூரியன், எமனையொத்த கரிய இருளை நீக்கி, திருமாலின் கொப்பூழில் பிரமனொடு சேர்ந்து மலர்ந்த தாமரை மலர் உதித்தாற் போல உதித்தான்.
(மூரி = வலிமை திங்களாகிய குடத்தினால் பாற்கடலிலிருந்து முகந்து, விண்ணிலிருந்து ஊற்றினாற்போன்று, வெண்ணிலவின் ஒளி, நட்சத்திரங்களுடன் கூடி விரிந்து நின்றது. இவ்வாறு இயற்கை வருணனைகள் காப்பியங்களில் அமைகின்றன.
|