|
2.9
தொகுப்புரை
ஆநிரை கவர்தலாகிய ஒழுக்கம்,
வெட்சித் திணை எனப்
பெறும் ; இத்திணை அகப்பொருள் திணைகளுள் ஒன்றாகிய
குறிஞ்சிக்குப் புறன்; இவ்வெட்சி ஒழுக்கம் மன்னுறு தொழில்,
தன்னுறு தொழில் என்று இரு வகைப்படும்; பொதுவாக வெட்சித்
திணைச் செய்திகளை ஐந்து வகைப்படுத்தலாம்; அவை கவர்தல்,
பேணல், அடைதல், பகுத்தல்,
வணங்கல் என்பனவாம் ;
கவர்தலாவது ஆநிரை கவர்தல்; பேணலாவது, கவர்ந்த
ஆநிரைகளைப் பாதுகாத்தல்; அடைதலாவது கவர்ந்து பேணிய
ஆநிரைகளைக் கைக்கொண்டு தன்னூரை அடைதல் ;
பகுத்தலாவது
கொண்டு வந்துசேர்த்த
ஆநிரைகளை மறவர்க்கும்
துடியர்க்கும் புள்வாய்ப்பச்சொன்ன புலவர்க்கும் பாணர்க்கும்
எனப் பல்லோர்க்கும் பகிர்ந்து கொடுப்பது; வணங்கலாவது
ஆநிரையைக் கவர்வதற்குத் துணையாகவும் அருளும்படியாகவும்
பராவுதல்; இ்ந்த
ஐந்து வகைகளில் அடங்கும் துறைகளின்
பெயர்க்காரணம், அவற்றின் விளக்கம், வெண்பாவின் கொளுக்
கருத்து, பொருந்தி வரும் அமைதி ஆகியனவற்றை இதுகாறும்
பார்த்தவற்றால் அறிந்தோம்.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II
|
1) |
‘தலைத்
தோற்றம்’ - இத்துறையை
விளக்குக. |
விடை |
2) |
கவர்ந்த
ஆநிரையை யார் யாருக்குப் பகுத்துக்
கொடுத்தல் மரபு? |
விடை |
3) |
பங்கை
மிகுதியாகக் கொடுப்பது யாருக்கு? இஃது எத்துறையின் பாற்படுகின்றது? |
விடை |
4) |
பிள்ளை
வழக்கு என்னும் துறையை விளக்குக. |
விடை |
5) |
தெய்வங்களை
வழிபடும் நிலை எத்தனை வகைப்படும்? அவை யாவை? |
விடை |
|