|
6.9
தொகுப்புரை
இதுகாறும் கீழே குறிப்பிடப்பட்டவை விளக்கப்பட்டன.
(அ) |
நொச்சி, எயில் காத்தல் ஆகும். இது எயில்போரின் பின் நிகழ்வு . உழிஞை , எயில் வளைத்தல் அஃதாவது, முற்றுகையிடல் . இது முன்னிகழ்வு . எனினும், புறப்பொருள் வெண்பாமாலையில் நொச்சிக்குப் பின்னரே உழிஞை வைக்கப்பட்டிருக்கின்றது
. |
(ஆ) |
உழிஞை மருதத்தின் புறன். தொல்காப்பியர் நொச்சியை உழிஞையின் மறுதலையாகக் கருதுகின்றார். எனவே இத்திணைகள் இரண்டும் மருதத்தின் புறனாகும். |
(இ) |
நொச்சித் திணையின் துறைகள் எட்டு. உழிஞையின் துறைகள் இருபத்து எட்டு. துறைகள் ஒவ்வொன்றும் அவ்வப் பெயர்களைப் பெற்றமைக்கான காரணங்கள், துறைப்பொருளை விளக்க வரும் வெண்பாக்களின் செய்திகள், அச்செய்திகள் கொளுக்களின் பொருள்களைக் கொண்டிருத்தல், துறையமைதி ஆகியவை வரிசையாக
இடம் பெற்றன. |
தன் மதிப்பீடு : வினாக்கள் -
Il
|
1. |
உழிஞைக் கொடியின் இக்காலப் பெயர் என்ன? |
|
2. |
உழிஞைப் போரின் வேறு பெயர் என்ன? |
|
3. |
உழிஞை எந்த அகத்திணையின் புறன்? |
|
4. |
உழிஞை ஒழுக்கம் - விளக்குக. |
|
5. |
உழிஞைத் துறைகள் எத்தனை? |
|
6. |
உழிஞை மன்னன் எத்தெய்வங்களையொப்ப எண்ணப்
பெறுகின்றான்? |
|
7. |
உழிஞையின் ‘புறத்திறை’ எங்கே தங்கியதைச் சொல்கின்றது? |
|
|
|