| 4.5 தொகுப்புரை | |||||||||||||||||||
நாடகத் தமிழுக்குப் புத்துயிர் தந்தவர் பேராசிரியர் சுந்தரம் பி்ள்ளை. இவரது முதல் நாடகமே கவிதை நாடகம். அதுவும் நடிப்பதற்கு உரிய நாடகம்; மீண்டும் மீண்டும் படித்து இன்புறுவதற்கு உரிய நாடகம்; அரங்க அமைவுக்கு இடம் தரும் அழகிய காட்சிப் பின்புலங்கள், மொழியின் செவ்வியல்பு நிலையை உறுதி செய்வதற்கு ஏற்ற நாடக உரையாடல்கள் கொண்ட நாடகம் எனப் பல நிலையிலும் தமிழன்னையின் மணிமகுடமாய் மனோன்மணீயம் திகழ்கிறது என்பதை இப்பாடத்தில் இடம்பெற்ற செய்திகளின் வாயிலாக அறிந்திருப்பீர்கள். |
|||||||||||||||||||
|
|||||||||||||||||||