உடலின் உறுதி உடையவரே
உலகில் இன்பம் உடையவராம்
இடமும் பொருளும் நோயாளிக்கு
இனிய வாழ்வு தந்திடுமோ ?
தூய காற்றும் நன்னீரும்
சுண்டப் பசித்தபின் உணவும்
நோயை ஓட்டி விடுமப்பா
நூறு வயது தருமப்பா
- கவிமணி தேசிக விநாயகனார்