வெள்ளை நிறத்தொரு பூனை – எங்கள்
வீட்டிலே வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை – அவைபேருக்கொரு நிறமாகும்;
சாம்பல் நிறமொரு குட்டி – கருஞ்சாந்து நிறமொரு குட்டி;
பாம்பு நிறமொரு குட்டி – வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி;
எந்த நிறமிருந்தாலும் – அவையாவும் ஒரே தரமன்றோ ?
- பாரதியார்