இரண்டாம் பருவம்

அகரம்

28.6 கேட்டல் கருத்தறிதல்

பாடம் - 28

என்ன வண்ணம் தீட்டலாம் ?

அப்பா : டேவிட், நாம் நம் புதிய வீட்டிற்குச் சென்று வருவோமா ?
டேவிட் : சரி அப்பா ! செல்வோம்.
அப்பா : வீடு அழகாகக் கட்டி இருக்கிறார்கள்.
டேவிட் : ஆமாம் அப்பா. வீட்டிற்கு வண்ணம் தீட்டினால் இன்னும் அழகாக இருக்கும்.
அப்பா : ஜன்னல்களுக்கு என்ன வண்ணம் தீட்டலாம் ?
டேவிட் : சாம்பல் வண்ணம்.
அப்பா : நானும் அதைத்தான் நினைத்தேன். கதவுகளுக்குக் கருநீலம் கொடுக்கலாமா ?
டேவிட் : மிகப் பொருத்தமான வண்ணம் அப்பா ! சுவர்களுக்கு வெள்ளை வண்ணம் தீட்டினால் பொருத்தமாக இருக்கும்.
அப்பா : அப்படியே ஆகட்டும் டேவிட். தூண்களுக்குக்கூட மஞ்சள் நிறம் கொடுக்கலாம்.
டேவிட் : அப்படியென்றால் உட்புறச் சுவர்களுக்கு இளம்பச்சை வண்ணம் கொடுக்கலாம்.
அப்பா : அருமை. சமையல் அறைக்கு இளஞ்சிவப்பு நன்றாக இருக்குமா ?
டேவிட்: வேண்டாம் அப்பா. சிவப்பு நன்றாக இருக்கும்.
அப்பா: நல்லது டேவிட். நாளை வண்ணம் அடிப்பவரை வரவழைத்துப் பேசிவிடலாம்.