|
|
மகள் : |
அப்பா ! வானத்தைப் பாருங்கள் மிக உயரத்தில் ஒரு பறவை! |
தந்தை : |
ஓ! அந்தப் பறவையா? |
மகள்: |
ஆமாம், அப்பா. அதன் பெயர் என்ன? |
தந்தை: |
கழுகு. அது கொன்றுண்ணிப் பறவை. |
மகள் : |
கொன்றுண்ணியா? |
தந்தை : |
ஆம் மகளே! எலி, கோழிக்குஞ்சு போன்றவற்றைக் கொன்று உண்ணும். |
மகள்: |
இந்தப் பறவை எங்கே வாழும்? |
தந்தை: |
உயரமான மரங்கள், மலைச்சரிவுகளில் கூடு கட்டு வாழும். |
மகள்: |
சரி அப்பா! இப்போது ஏன் இங்குச் சுற்றுகிறது? |
அப்பா : |
அது, தனக்கான இரையைத் தேடுகிறது. |
மகள்: |
ஓ, அப்படியா! வானில் மிக உயரத்தில் இருக்கும்போது அதற்குக் கண்
தெரியுமா?
|
அப்பா : |
ஆமாம், நன்றாகத் தெரியும். கழுகின் கண்பார்வை மிகக் கூர்மையானது. |