| மகள் : | அப்பா ! வானத்தைப் பாருங்கள் மிக உயரத்தில் ஒரு பறவை! |
| தந்தை : | ஓ! அந்தப் பறவையா? |
| மகள்: | ஆமாம், அப்பா. அதன் பெயர் என்ன? |
| தந்தை: | கழுகு. அது கொன்றுண்ணிப் பறவை. |
| மகள் : | கொன்றுண்ணியா? |
| தந்தை : | ஆம் மகளே! எலி, கோழிக்குஞ்சு போன்றவற்றைக் கொன்று உண்ணும். |
| மகள்: | இந்தப் பறவை எங்கே வாழும்? |
| தந்தை: | உயரமான மரங்கள், மலைச்சரிவுகளில் கூடு கட்டு வாழும். |
| மகள்: | சரி அப்பா! இப்போது ஏன் இங்குச் சுற்றுகிறது? |
| அப்பா : | அது, தனக்கான இரையைத் தேடுகிறது. |
| மகள்: | ஓ, அப்படியா! வானில் மிக உயரத்தில் இருக்கும்போது அதற்குக் கண் தெரியுமா? |
| அப்பா : | ஆமாம், நன்றாகத் தெரியும். கழுகின் கண்பார்வை மிகக் கூர்மையானது. |