இகரம்
(முதல் பருவம்)
கடற் கரைக்குச் சென்றிடலாம்
வா தம்பி வா – அங்கே
காற்று வாங்கி வந்திடலாம்
வா தம்பி வா
உடல் வளர நல்லதடா
வா தம்பி வா - அந்த
உப்பங் காற்றின் சக்தியடா
வா தம்பி வா
வெள்ளை மணல் மீதிருப்போம்
வா தம்பி வா - சற்றே
விளை யாடித் திரும்பிடுவோம்
வா தம்பி வா
பிள்ளை களும் வந்திடுவார்
வா தம்பி வா - அங்கே
பெரிய வரும் கூடிடுவார்
வா தம்பி வா
-அழ. வள்ளியப்பா