இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 4
4.3 பாடி மகிழ்வோம்

கடற்கரை

கடற் கரைக்குச் சென்றிடலாம்

வா தம்பி வா – அங்கே

காற்று வாங்கி வந்திடலாம்

வா தம்பி வா

உடல் வளர நல்லதடா

வா தம்பி வா - அந்த

உப்பங் காற்றின் சக்தியடா

வா தம்பி வா

வெள்ளை மணல் மீதிருப்போம்

வா தம்பி வா - சற்றே

விளை யாடித் திரும்பிடுவோம்

வா தம்பி வா

பிள்ளை களும் வந்திடுவார்

வா தம்பி வா - அங்கே

பெரிய வரும் கூடிடுவார்

வா தம்பி வா

-அழ. வள்ளியப்பா