இகரம்
(முதல் பருவம்)
தொழிலைக் கற்போமே! – கைத்
தொழிலைக் கற்போமே!
அழகுப் பூக்கள் பின்னலாம்;
ஆடை தைக்கக் கற்கலாம்;
உழவுத் தொழிலைச் செய்யலாம்;
ஓவியங்கள் தீட்டலாம்!
கத்தரிக்கப் பழகலாம்;
காகிதப்பூ செய்யலாம்;
முத்து மாலை கோக்கலாம்;
முல்லைப் பூக்கள் தொடுக்கலாம்!
-வாணிதாசன்