இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 6
6.3 பாடிமகிழ்வோம்

பெண் கல்வி

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் - பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை!
சிலைபோல ஏனங்கு நின்றாய்? - நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்?
விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி
வேளைதோறும் கற்று வருவதால் படியும்!
மலைவாழை அல்லவோ கல்வி? - நீ
வாயார உண்ணுவாய் போ என் புதல்வி!

- பாரதிதாசன்