இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 9
9.3 பாடி மகிழ்வோம்

கல்வி

கல்வியுள்ளவரே! கண்ணுள்ளார் என்னலாம்

கல்வியில்லாதவர் கண் புண்ணென்றே பன்னலாம்

கல்வி மிகுந்திடில் கழிந்திடும் கடமை!

கற்பதுவேஉன் முதற் கடமை


இளமையிற் கல்லென இசைக்கும் ஒளவையார்

இன்பக் கருத்தை நீ சிந்திப்பாய் செவ்வையாய்

இளமை கழிந்திடில் ஏறுமோ கல்விதான்?

இப்பொழுதே உண் இனித்திடும் தேன்

-பாரதிதாசன்