இகரம்
(முதல் பருவம்)
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருந்திடல் உனக்கே சரியாமோ
உழவும் தொழிலும் இல்லாமல்
உலகில் ஒன்றும் செல்லாது
விழவும் கலையும் விருந்துகளும்
வேறுள இன்பமும் இருந்திடுமோ
- நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்