இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 17
17.3 பாடி மகிழ்வோம்

நாட்டு வணக்கம்

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே -அதன்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே -அவர்

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

சிறந்ததும் இந்நாடே -இதை

வந்தனை கூறி மனதில் இருத்தி, என்

வாயுற வாழ்த்தேனோ

- பாரதியார்