இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 22
22.4 தெரிந்துகொள்வோம்

மரபுத்தொடர்கள்

ஒரு சொல் அல்லது சொற்றொடர், அதன் நேர்பொருளை உணர்த்தாமல் வழிவழியாக வழங்கப்படும் வேறு பொருளைத் தருவது மரபுத்தொடர் ஆகும்.

கண்ணனது குடும்பம் வாழையடிவாழையாகப் பயிர்த்தொழில் செய்து வருகிறது.
கண்ணன் சாப்பிட மாட்டேன் என்று தாயுடன் மல்லுக்கட்டினான்.
சின்னய்யா, மருத்துவச் செலவுக்குப் பணமின்றித் தவித்தபோது, இனியா கைகொடுத்தாள்.