இகரம்
(இரண்டாம் பருவம்)
![]() |
குழந்தை கலகல எனச் சிரித்தது. | |
![]() |
மரம் மடமட என முறிந்தது. | |
![]() |
ஓடையில் நீர் சலசல என ஓடியது. | |
![]() |
வைர மோதிரம் பளபள என மின்னியது. |
இரட்டைக்கிளவி என்பது, ஒரே சொல் இரண்டு முறை சேர்ந்து வரும். இவற்றைப் பிரிக்க முடியாது. பிரித்தால் பொருள் தராது. ஒலிக்குறிப்புகளாகவே சேர்ந்து வரும்.
இரட்டைக்கிளவி
கடகட | கணகண | கருகரு | கமகம |
கிடுகிடு | கிறுகிறு | கீச்கீச் | குளுகுளு |
சடசட | சரசர | சிடுசிடு | தடதட |
நறநற | படபட | பரபர | பொலபொல |
மடமட | மளமள | வளவள | வெளுவெளு |
ஒரு சொல் இரண்டு முறையும் அதற்கு மேலும் அடுக்கி வந்தால் அதனை அடுக்குத்தொடர் என்போம். சொல்லைப் பிரித்தால் பொருள் தரும் துல்லியமாகச் சொல்லவும் உணர்வுகளை வெளிப்படுத்தவும் இவை அடுக்கி வரும்.
![]() |
காட்டில் மான்கள் துள்ளித்துள்ளி ஓடின. | |
![]() |
அம்மா வாழை இலையில் சுடச்சுட உணவு பரிமாறினாள். | |
![]() |
பறவைகள் கூட்டம்கூட்டமாகப் பறந்தன. | |
![]() |
பூங்காவில் வண்ணவண்ணப் பூக்கள் பூத்திருந்தன. | |
![]() |
மரத்தில் தொங்கிய குரங்குளைக் கண்ட சிறுவர்கள் குரங்கு! குரங்கு! என்று கத்தினர். |