இகரம்(இரண்டாம் பருவம்)
காற்றில் பாய்ந்து செல்லுவேன்
கடலும் மலையும் தாண்டுவேன்
ஆற்று வெள்ளம் தன்னையே
அணைகள் கட்டித் தேக்குவேன்
பாட்டும் கலையும் பயிலுவேன்
பசியும் பிணியும் போக்குவேன்
நாட்டின் செல்வம் ஓங்கவே
நல்ல பணிகள் ஆற்றுவேன்
- பெ. தூரன்