இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 27
27.4 தெரிந்து கொள்வோம்

தொடரமைப்பு

சொற்கள் ஒன்றுடன் ஒன்று பொருள் தரும் முறையில் தொடர்வது தொடர் ஆகும். தொடர், ‘வாக்கியம்’ என்றும் வழங்கப்படுகிறது. எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்ற மூன்று உறுப்புகள் இணைந்து ஒரு தொடர் அமையும்.

எழுவாய்

பெயர்ச்சொல் தொடரின் முதலில்வரும்.

பயனிலை

வினைச்சொல் தொடரின்இறுதியில்வரும்.

செயப்படுபொருள்

எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில்வரும்.

எழுவாய் செயப்படுபொருள் பயனிலை
சிவா கவிதை எழுதினான்
கதிரவன் ஓவியம் வரைந்தான்
வெண்பா மலரைப் பறித்தாள்
ரோஜா பாடம் படித்தாள்
அக்கா தட்டச்சு செய்தார்
வீரர்கள் நாட்டைக் காத்தனர்