இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
30.3 பாடி மகிழ்வோம்

இன்பம்

கற்றவர்முன் தாம் கற்ற

கல்வியைக் கூறல் இன்பம்

வெற்றியை வாழ்வில் சேர்க்கும்

வினைபல புரிதல் இன்பம்

சிற்றினக் கயவ ரோடு

சேராது வாழ்தல் இன்பம்

பெற்றதை வழங்கி வாழும்

பெருங்குணம் பெறுதல் இன்பம்

- கவிஞர் சுரதா