11.10 படைப்பாற்றல் வளர்ப்போம்
பின்வரும் படக்குறிப்புகளைக் கொண்டு, உழைப்பு என்னும் தலைப்பில் சிறுகதை உருவாக்குக.
11.11 உயர்நிலைத்திறன்
முறைமாறியுள்ள தொடர்களை முறைப்படுத்தி எழுதுக.
- மாடுகள் வாங்குவதற்ககாகப் பணமூட்டையுடன் சந்தைக்குச் சென்றான்.
- வழியில் ஒரு குரங்கு, அவன் கையிலிருந்து பணமூட்டையைப் பறித்துச் சென்றது.
- கண்ணன் பால் வியாபாரம் செய்கிறான். பாலில் பாதிக்குப் பாதி தண்ணீர் கலந்து விற்பது அவனது வழக்கம்.
- குரங்கைத் துரத்திச் சென்ற கண்ணன், அது ஒரு குளத்தின் அருகே இருப்தைப் பார்த்தான்.
- ஆசை அடங்காத கண்ணன், புதிதாக இரு பசுமாடு வாங்கி, வியாபாரத்தைப் பெருக்க எண்ணினான்.
- குரங்கின் செயலைக் கண்டு பதறிய கண்ணன், அதனை அச்சுறுத்தவே, குரங்கு மீதம் இருந்த பணமூட்டையை அவனைநோக்கி வீசியது.
- கிடைக்கவேண்டிய பணம் கிடைத்துவிட்டது. தண்ணீரால் வந்த பணம் தண்ணீரோடு போயிற்று. இனிமேலாவது திருந்தி வாழ்வோம் என முடிவுசெய்தான்.
- குரங்கு, மூட்டையைப் பிரித்து, ஒவ்வொரு நாணயமாக எடுத்துக் கடித்துப் பார்த்தது.
- கண்ணன் ஓடிச்சென்று, மூட்டையிலிருந்த நாணயங்களை எண்ணினான். கொண்டு வந்ததில் பாதிக்குப் பாதிதான் இருந்தன.
11.12 செயல்திட்டம்
தொழிற்புரட்சியினால் வேளாண்மைத் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து படத்தொகுப்பு ஒன்றை உருவாக்கி வருக