பயிற்சி - ஈறுகெடாத எதிர்மறைப் பெயரெச்சச் சொற்களைக் கண்டறிக
கீழே கொடுக்கப்பட்டுள்ள உரைப்பகுதியிலிருந்து சரியான சொற்களை இழுத்து பெட்டிகளில் இடவும்:
காவிரி வளநாட்டிலுள்ள திருவையாறு என்னும் சிற்றூரில் பூஞ்சோலை ஒன்று இருந்தது.
அது வெயில் புகாத பூஞ்சோலை ஆகும்.
அங்கு வாடாத மலர்கள் நிரம்ப இருந்தன.
அங்கே வற்றாத குளம் ஒன்றும் இருந்தது.
பசுமை மாறாத செடிகொடிகளை உடைய அச்சோலை கண்களுக்கு விருந்தளிப்பதாக இருந்தது.