சிகரம்
(முதல் பருவம்)
உயிரெழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வரும்.
எ.கா:
| அ | அம்மா | எ | எலி |
| ஆ | ஆடு | ஏ | ஏணி |
| இ | இலை | ஐ | ஐந்து |
| ஈ | ஈட்டி | ஒ | ஒன்று |
| உ | உடை | ஓ | ஓடு |
| ஊ | ஊர் | ஔ | ஓவை |
மெய்யெழுத்துகளுள் க், ங், ச், ஞ், த், ந், ப், ம், ய், வ் ஆகிய பத்து மட்டுமே மொழிக்கு முதலில் வரும். மெய்யெழுத்துகள் தனித்து மொழிக்கு முதலில் வருவதில்லை. உயிரெழுத்துகளுடன் சேர்ந்தே வரும்.
க், த், ந், ப், ம் ஆகிய ஐந்தும் உயிரெழுத்து பன்னிரண்டுடனும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும்.
ங், ச், ஞ், ய், வ் ஆகிய ஐந்தும் சில உயிரெழுத்துகளோடு மட்டும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும்.
’ங்’ என்னும் மெய்யெழுத்து ’அ’ என்னும் உயிரெழுத்தோடு மட்டும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும்.
எ.கா:
ஙனம் (விதம்)
’ச்’ என்னும் மெய்யெழுத்து அ, ஐ, ஔ ஆகிய உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து வராது. ஆனால் தற்போது சங்கு, சக்கரம் போன்ற சொற்கள் வழக்கில் உள்ளன.
’ஞ்’ என்னும் மெய்யெழுத்து அ, ஆ, எ, ஒ ஆகிய நான்கு எழுத்துகளுடன் மட்டுமே வரும்.
எ.கா:
| ஞ | ஞமலி | ஞா | ஞாஞாயிறு |
| ஞெ | ஞெகிழி | ஞொ | ஞொள்ளுதல் |
’ய்’ என்னும் மெய்யெழுத்து அ, ஆ, உ, ஊ, ஓ, ஒள ஆகிய உயிர் எழுத்துகளுடன் மட்டுமே வரும்.
எ.கா:
| ய | யவனர் | யூ | யூகி |
| யா | யானை | யோ | யோகம் |
| யு | யுகம் | யௌ | யௌவனம் |
’வ்’ என்னும் மெய்யெழுத்து அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ ஒள ஆகிய எட்டு உயிர் எழுத்துகளுடன் மட்டுமே வரும்.
எ.கா:
| வ | வணக்கம் | வெ | வெள்ளை |
| வா | வாழ்த்து | வே | வேம்பு |
| வி | விழி | வை | வைகை |
| வீ | வீடு | வௌ | வௌவால் |