24.9 உயர்நிலைத்திறன்
பின்வரும் கதையைச் சரியான முறையில் வரிசையாக மாற்றி அமைத்து அதற்கேற்றாற்போல் தலைப்பு ஒன்றை இடுக.
- என்னம்மா... இவ்வளவு சிறிய பையைத் தூக்கிக்கொண்டே மலை ஏற என்னால் முடியவில்லையே! உன்னால் எப்படியம்மா இந்தச் சிறுவனைத் தூக்கிக்கொண்டு ஏற முடிகிறது?
- குன்னூர் மலையடிவாரத்தில் மருதூர் என்ற அழகிய கிராமம் இருந்தது.
- சற்றுத் தூரம் இன்னும் முன்னால் போனதும், அங்கே ஒரு மலைவாழ் சிறுமி தனது மூன்று வயதுத் தம்பியைத் தூக்கிக்கொண்டும், உற்சாகமாய்ப் பாடல் ஒன்றைப் பாடிக்கொண்டும் மிகச்சாதாரணமாய் மலை உச்சி நோக்கிப் போவதைப் பார்த்தார்.
- செங்குத்தான மலை. எனவே, மேலே ஏறஏறச் சுமை அதிகமாகி மூச்சு வாங்கத் தொடங்கியது அவருக்கு.
- அய்யா... நீங்கள் தூக்கிக்கொண்டிருப்பது ஒரு சுமையை, ஆனால், நான் தூக்கிக் கொண்டிருப்பதோ என் தம்பியை! அன்பு எதையும் சுமக்கும் என்று அந்த நபருக்குப் புரிந்தது.
- பெரியவருக்கோ ஆச்சரியமான ஆச்சரியம். அவர் சிறுமியைப் பார்த்துக் கேட்டார்.
- அதற்கு அந்தச் சிறுமி பதில் சொன்னாள்.
- ஒரு நாள் அந்த ஊரிலிருந்து ஒருவர் தமக்குத் தேவையான பொருள்களைத் தூக்கிக்கொண்டு மலை உச்சியை நோக்கி ஏறிக்கொண்டிருந்தார்.
24.10 செயல்திட்டம்
’தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும்’ என்ற தலைப்பில் ஒரு குழு, ‘இறைக்கிற கிணறுதான் ஊறும்’ என்ற தலைப்பில் ஒரு குழு என இரண்டாகப் பிரிந்து விவாத அரங்கம் ஒன்றை நிகழ்த்துக.