தமிழ்நெறிவிளக்கத்தில் உள்ளன. ஆகவே இவர் பரிமேலழகருக்கு
முந்தியவர் என்று தெரிகிறது. உணவைப் பற்றிக் கூறும்போது தருப்பணம்
என்று உணவுவகையில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. தருப்பணம் அவல்.
இத்தகைய ஒப்பற்ற இலக்கண நூலை ஐயரவர்கள் 1937-ம் ஆண்டு
தமிழ் உலகிற்கு அளித்தார்கள். அவரது மகனார் திரு. கலியாண
சுந்தரையர் 1947-ம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக அளித்தார்கள், பல
அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க நூல்நிலையம் மூன்றாம் பதிப்பாக
வெளியிடுகின்றது. ஒப்பு நோக்குதல் பணியைச் செய்தவர் திருமதி ஆர்.
புவனேசுவரி அவர்கள். |