முகப்பு |
ஆலங்குடி வங்கனார் |
230. மருதம் |
முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை, |
||
கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை, |
||
கணைக் கால், ஆம்பல் அமிழ்து நாறு தண் போது, |
||
குணக்குத் தோன்று வெள்ளியின், இருள் கெட விரியும் |
||
5 |
கயற்கணம் கலித்த பொய்கை ஊர! |
|
முனிவு இல் பரத்தையை எற் துறந்து அருளாய்; |
||
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க, |
||
புதுவறம்கூர்ந்த செறுவில் தண்ணென |
||
மலி புனல் பரத்தந்தாஅங்கு, |
||
10 |
இனிதே தெய்ய, நின் காணுங்காலே. | உரை |
தோழி வாயில் மறுத்தது.-ஆலங்குடி வங்கனார்
|
330. மருதம் |
தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து, |
||
மட நடை நாரைப் பல் இனம் இரிய, |
||
நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து, |
||
நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினை |
||
5 |
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் |
|
யாணர் ஊர! நின் மாண் இழை மகளிரை |
||
எம் மனைத் தந்து நீ தழீஇயினும், அவர்தம் |
||
புன் மனத்து உண்மையோ அரிதே: அவரும், |
||
பைந் தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து, |
||
10 |
நன்றி சான்ற கற்பொடு |
|
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே. | உரை | |
தோழி, தலைமகனை வாயில் மறுத்தது.-ஆலங்குடி வங்கனார்
|
400. மருதம் |
வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும் |
||
நெல் விளை கழனி நேர் கண் செறுவின், |
||
அரிவனர் இட்ட சூட்டு அயல், பெரிய |
||
இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர! |
||
5 |
நினின்று அமைகுவென்ஆயின், இவண் நின்று, |
|
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ? |
||
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து, |
||
அறம் கெட அறியாதாங்கு, சிறந்த |
||
கேண்மையொடு அளைஇ, நீயே |
||
10 |
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே. | உரை |
பரத்தை தலைவனைப் புகழ்ந்தது. முன்பு நின்று யாதோ புகழ்ந்தவாறு எனின், 'நின் இன்று அமையாம்' என்று சொன்னமையான் என்பது.-ஆலங்குடி வங்கனார்
|